சனி, 6 ஏப்ரல், 2013

முதல் முயற்சி நேதேர்லண்டை பற்றி

நேதேர்லண்ட(Nederland ) மிக அழகான நாடு, இந்நாட்டை ஹாலந்து(Holland ) எனவும் இந்நாட்டு மக்களை தட்ச்(Dutch ) என்று பரவலாக அழைப்பார்கள்


அம்ச்டேர்டம் இதன் தலை நகரம் . அம்ச்டேர்டம் மிகவும் பிரபலமான ஒரு நகரமாக கருத படுகிறது. இங்கு வாழும் மக்கள் உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருபதாக சமிபத்தில் ஒரு கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.



இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த  மரியாதையை கொடுகிறார்கள்.

இந்நாட்டின் சில பகுதிகள் கடல் மட்டத்துக்கு கீழே உள்ளது. அதனால் நாடு முழுவதும் தண்ணீரை வாய்க்கால்கள் மூலம் திசை திருப்பி வடிவமைத்து உள்ளார்கள்.


உலகில் தண்ணீரை/வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் இந்நாடு சிறந்து விளங்குகிறது. நாடு முழுவதும் சாலைகளுக்கு சமமாக வாய்க்கால்கள் உள்ளன .


முற்காலத்தில் தண்ணீரை கட்டுப்படுத்துவதற்கு காற்றாலைகள் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் வாய்க்கால்கள் ஓரம் காற்றாலைகலை காணமுடிகிறது.  மின்சாரம் கண்டுபிடிக்கும் வரை இக்காற்றாலைகள் சோள மாவு அரைத்து ரொட்டி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன .



தட்ச் மக்கள் தங்கள் நாட்டில் உள்ள பழைய காற்றாலைகள் இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். காற்றாலைகள் தட்ச் நாட்டின் முக்கிய சின்னமாக போற்றி பாதுகாக்கப்படுகிறது.







  

2 கருத்துகள்: